புதன், 30 அக்டோபர், 2013

சந்தானத்திற்கு எதிர்ப்பு


இப்போது வெளிவரும் படங்கள் பெரும்பாலும் பெண்களை கேவலமாக கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளது வருத்தத்திற்கு உரியது. அதிலும் பெண்களை கேலி செய்யும் வேலைகளை சந்தானம் ஒவ்வொரு படத்திலும் தவறாமல் செய்துவருகிறார்.



இவர்  படங்களிலும் இவர் ஹீரோவின் நண்பனாக இருந்துகொண்டு பெண்களை கேவலமாக பேசுகிறார். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூட அதையே தான் விரும்புகின்றனர். காதலில் பெண்கள் மட்டும் தான் ஏமாற்றி விடுவது போலவும் ஆண்கள்  எல்லாம் நல்லவர்களாக இருப்பது போலவும் இவர் வசனம் இடம் பெறுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது அப்போதெல்லாம் இதை எல்லாரும் தன வீட்டிலும் பெண்கள் இருகிறார்கள் என்பதை மறந்து பார்த்து சிரித்து இவரின் இந்த நடவடிக்கைக்கு மேலும் ஆதரவு தந்தனர். இநிலையில் என்றென்றும் புன்னகை படத்தில் இவர் ஒரு பெண்ணை பற்றி பேசிய வசனம்  முகம் சுளிக்க வைத்துள்ளது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கேஸ் போட்டுள்ளனர். இது வரவேற்கதக்க ஒன்றாகும். இனிவரும் படங்களில் இவர் இது போன்று பேசாமல் இருப்பதற்கு இது ஒரு வழியாக அமையும்.



சந்தானம் மட்டுமல்லாமல் இப்போது வருகின்ற மற்ற படங்களிலும் பெண்களை பற்றிய கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள், கிண்டல் செய்யும் வகையில் காமடிகள் இடம் பெறுகின்றன. இப்போது அப்படி வருகின்ற நகைச்சுவை காட்சிகள் தான் அதிக அளவில ஹிட் ஆகின்றன. இதைவைத்து பார்த்தாலே தமிழ் நாட்டில் பெண்களை எந்த அளவுக்கு மதிகிறார்கள் என்று தெரியும். அதுமட்டும் இல்லாமல் பெண்கள் ஆண்களை  ஏமாற்றுவது போல பாடல்கள் இடம்பெறுவதும் காலகாலமாக நடந்துகொண்டு தான் இருகின்றன. இதை ஆனா வர்க்கமும் பேராதரவு தந்து வரவேற்றுகொண்டு தான் இருகின்றன. நாட்டில் கற்பழிப்பு அதிகாமாவது இதனால் தான். கர்ப்பழிப்பவனை மட்டுமே தவறு சொல்லும் இந்த சமூகம் அவன் அப்படி செய்வதற்கு காரணமான பெண்களை கேவலமாக சித்தரிக்கும் பட அதிபர்களையும், இயக்குனர்களையும் நடிகர்களையும் கண்டுகொள்வதே இல்லை.

ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் இருகிறார்கள் பெண்கள் பற்றி பேசும்போதும் அவர்களை கிண்டல் செய்யும்போதும் தன்  வீட்டில் உள்ள பெண்களையும் நினைத்துபார்க்கவேண்டும். அப்படி நினைகாததன் விளைவு தான் இன்று நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்.